Saturday 4th of May 2024 05:41:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டம்: கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு!

சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டம்: கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு!


சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாடுதழுவியதாக இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று (ஜூன்-11) காலை 7 மணிமுதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தாதிய ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கள நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலயைில், இன்று கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமக்கு கிடைக்க வேண்டிய மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு, சுகாதார பொருட்கள் உள்ளிட்வை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அரச கதிரியக்க மற்றும் தொழிநுட்வியலாளர்கள் சங்கம், குடும்ப நல சுகாதார சேவை சங்கம் மற்றும் அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதாரதுறைசார் 26 தொழிற்ச் சங்கங்கள் இணைந்து இன்று காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE